13 Nov 2019

திருமண வாழ்த்து கவிதை - தோழிக்கு

செவ்வந்தி பூ ஒன்று
இதழ் மூடி சிரிக்குதம்மா;
கானக் குயில் ஒன்று
தன் ஜோடி கண்டதம்மா;
மணக்கோலம் அது பூண்டு
மணவாழ்வு காணும் தோழியே;
செல்லும் இடம் அதில்,
தாயாக,
தாரமாக,
உறவாக,
உயிராக,
காற்றிலே கலந்து
மணம் வீசிடு;
தேனும் பாலும் போல
ஒன்றாய் கலந்து,
மங்காத புகழும்,
அழியாத கல்வியும்,
குன்றாத வலிமையும்,
நீங்காத வெற்றியும்,
பேர் சொல்லும் மக்களும்,
தீராத செல்வமும்,
நிறைந்த நெல்லும்,
நல் விதியும்,
இனிய நுகர்ச்சியும்,
நுண்ணிய அறிவும்,
ஒப்பற்ற அழகும்,
தாழாத கீர்த்தியும்,
பார் புகழும் குணமும்,
நோயற்ற உடலும்,
பெற்று பல்லாண்டு வாழ
நட்புகள் யாம்
ஒரே மனதுடன் வாழ்த்துகின்றோம்.
                  - கனி.

No comments:

Post a Comment