12 Jan 2020

உதிரிப்பூக்கள்- 02

 #ஏனோ

 கல்லை உடைத்து
 இதயம் செய்தவள்
 என் இருதயத்தினை
 துகள்களாய் உடைத்தது
 ஏனோ?

 #தனிமை

 கட்டுக்கடங்கா கோபத்தையும்
 மட்டுப்படுத்தும் 
 தனிமை,
 தனது தவறினையும்
 உணர செய்தல்
 இனிமை.


 #அறுசுவை விருந்து

துன்பங்கள், துயரங்கள்
வாழ்வில் வரும்போது
புன்னகையுடன் எதிர்கொண்டு
முன்செல்கிறேன்.,

எரிப்பும், துவர்பும் கூட
அறுசுவை விருந்தின்
ஒருபகுதி என 
உணர்ந்ததால்..

#ஹைக்கூ

பசுமை புரட்சி
நீரில்-
குளத்தில் புற்கள்.

 


#அமுதும்,விடமும்

அளவுக்கு மிஞ்சினால்
அமுதும் விடமாகும்,
அளவில் குறைந்தால்
விடமும் அமுதாகும்..

No comments:

Post a Comment