23 Mar 2020

கல்லூரியின் இறுதிநாள்

நேற்றுவரை கசந்த வகுப்புகள்
இன்று இனிக்கின்றது.
நேற்றுவரை  இனித்த விடுமுறையோ
இன்று கசக்கின்றது.
ஆயிரமாயிரம் நினைவலைகளோடு
மூன்று ஆண்டுகள்
அதின் எல்லையை
தொட விரைகின்றது.
ஐம்பத்து-ஒருவர் ஒருவராய் வாழ்ந்தோம்
இன்று ஐம்பத்தொரு திசைகளில்
நம்மை பிரிக்கின்றது காலம்.
தோட்டத்தில் மலர்ந்த பூக்களை
வீடுகள்தோறும், வீதீகள்தோறும்
மணம்  வீச-
அழைக்கின்றது உலகம்.
கற்ற கல்வியையும்,
பெற்ற அன்பினையும்
துணைக் கொண்டு
தரணி எங்கும் செல்லுவோம்.
மலைமேல் தீபமாய்
எழும்பி பிரகாசிப்போம்..
- Greetings By Kani Marak

No comments:

Post a Comment